Friday, December 12, 2008

பூ தந்தால் புறக்கணிப்பா?

சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி உள் ளிட்ட அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் புதனன்று தேர்வுகள் துவங்கின.பெரும்வன்முறைச் சம்பவத்திற்குப் பிறகு, தமிழகமே அதைப்பார்த்து அதிர்ந்து போன சூழலில் ஒத்திவைக்கப் பட்ட தேர்வுகள் தற்போது துவங்கியுள்ளன. கல்விக் கூடங்கள் சமத்துவத்தின் இருப்பிடங்கள், அங்கு சாதியச் சிந்தனைக்கோ, வெறிக்கோ, வன்முறைக்கோ இட மில்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி இயங்கிவரும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், சென் னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் தேர்வு எழுதவந்த அனைத்து மாணவர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றிருக்கிறார்கள். மாணவர்களிடையே, ஒற்றுமை உணர்வு வலுப்படட்டும் என்ற முழக்கத்துடன் நடந்துள்ள இந்த நிகழ்வை படம் பிடிக்க எந்த டி.வி. கேமராவும் வர வில்லை. தீக்கதிர் தவிர, எந்த பத்திரிகையிலும் மீடியாவிலும் இப்படியொரு வரவேற்பு நடந்ததாகக்கூட பதிவாகவில்லை. இதே பத்திரிகைகளும், 24 மணிநேர செய்தி சேனல் களும்தான், சட்டக்கல்லூரி மாணவர்களின் கொடிய வன் முறையை இடைவிடாமல் ஒளிபரப்பிக்கொண்டே இருந் தன. தமிழகத்தையே பெரும் பீதிக்குள்ளாக்கின.வன்முறையை திரும்பத்திரும்ப ஒளிபரப்பிய மீடியாக் கள், அதே கல்லூரியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் மாணவர் சங்கத்தின் சீரிய முயற்சியை ஒளிபரப்பவில்லை.இதுதான் வன்முறையை காசாக்கத் தெரிந்த முதலாளித் துவ மீடியாக்களின் பத்திரிகை தர்மம்!
-எஸ்.பி.ஆர்

No comments:

Post a Comment