Friday, December 12, 2008

அலைமோதும் இளைய தமிழகம்




சொர்க்கபுரி என்று அழைக்கப் பட்ட அமெரிக்காவே, பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தாக்குதலால் ஆடிப்போயுள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக செய்திகள் அலறுகின் றன. மொத்தத்தில் தற்போது வரை சுமார் 1கோடிக்கும் அதிகமானோரின் வேலை பறிக்கப்பட்டு வீதிக்கு வந்துவிட்டார்கள்.
நெருக்கடியின் கடும் எதிரொலி எந்த நாட்டையும், விட்டுவைக்கவில் லை. குறிப்பாக இந்திய இளைஞர்கள் அதிகமாக செல்லும், துபாய், சவூதி அரேபியா போன்ற வளைகுடா நாடுக ளும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுக ளும் இனி வராதீர்கள் என்று சொல்லா மல் சொல்லத் துவங்கி விட்டன. கடைசி யாக சில மாதங்களுக்குமுன்னால் துபாய்க்கு வேலைக்குச் சென்ற தமிழக இளைஞர்கள் பெறுகிற சம்பளம் வெறும் 250 தினார்கள்தானாம். இதன் இந்திய மதிப்பு வெறும் ரூ.5000 மட்டும்தான். வெறும் ரூ.5000 சம்பாதிப்பதற்கு, மனை வியை விட்டு, குழந்தைகளை விட்டு, வீட்டைவிட்டு, நாட்டைவிட்டு பிரிந்தி ருக்க வேண்டிய கொடுமை.
மெத்தப்படித்த இளைஞர்களின் அமெரிக்கக் கனவுகளும், ஓளரவு படித்துக் கற்றுக்கொண்ட கிராமப்புற இளைஞர்களின் வளைகுடா நாடுகள் கனவும் பொய்த்துக் கொண்டிருக்கிறது.
சரி, வெளிநாடுகளில்தான் நிலைமை இப்படியென்றால், உள்நாட்டில்...?
தமிழ்நாட்டின் வேலையின்மைக் கொடுமையை 5 நிமிடத்தில் அனுபவப் பூர்வமாக உணரவேண்டுமானால், சனி, ஞாயிறு கிழமைகளில் மதுரை ஆரப் பாளையம் ப நிலையத்திற்குச் செல்ல வேண்டும். நகர முடியாது, திருப்பூருக்கும் கோயம்புத்தூருக்கும் பெட்டிகளோடு குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்ட மாக, ஆயிரமாயிரம் மக்கள், பெண்கள், இளைஞர்கள், பேருந்தைப்பிடிக்க ஓட்ட மாய் ஓடும் காட்சியே சாட்சி. எவர் முகத்திலும் மகிழ்ச்சியைக் காண முடி யாது. குடும்பத்தைப் பிரிந்து வந்த மிரட்சி; வேலை கிடைக்குமோ, கிடைக்காதோ என்கிற மருட்சி; ஏற்கெனவே வேலை செய்பவர்களாக இருந்தால், என்னத்த என்கிற விரக்தி. தென் தமிழகமே புலம் பெயர்ந்து போவது போல் இருக்கும்.
ஆனால், உலக நெருக்கடியின் கொடிய கரங்கள் திருப்பூர் பின்னலாடைத் தொழி லையும் கோவை பொறியியல் தொழிலை யும் பாதிக்கத் துவங்கியுள்ளதாக வரும் செய்திகள், இம்மக்களைக் கலங்க வைத்துள்ளது.
மற்றொருபுறம், சென்னைக்கும், பெங்களூருக்கும் படையெடுக்கும் படித்த இளைஞர்கள் ஆயிரமாயிரம், ஏற்கெனவே ஐ.டி. நிறுவனங்களில் வேலையில் இருப்பவர்களுக்கே பிங்க்கார்டு எனப்படும் இளஞ்சிவப்பு கார்டு களைக் கொடுத்து வெளியில் விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிங்க்கார்டு என்றால், நாளையிலிருந்து நீ இங்கு வரவேண்டியதில்லை என்பதை நாகரிகமாக சொல்வதாகும். வேலை யில்லை என்பதை எப்படி சொன்னால் என்ன?
மொத்தத்தில், அமெரிக்காவும் இல் லை; துபாயும் இல்லை; திருப்பூரும் இல்லை; சென்னையும் இல்லை. படித்த, படிக்காத, படித்துக் கொண்டிருக்கிற இளைஞர்களின் எதிர்காலம் சூனிய மாகத்தெரிகிற கொடுமை.
தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்ப கங்களில் பதிந்து வைத்திருக்கிற இளை ஞர்களின் எண்ணிக்கை 48 லட்சம். இவர்களில் ஆண்டுக்கு சுமார் 12 ஆயிரம் பேர் முதல் 14 ஆயிரம் பேர் வரை ஏதோ ஒரு வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். பதிவு செய்தவர்களில் சுமார் 20 லட்சம் பேர் பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள்; 10.54 லட்சம் பேர் மிகவும் பிற்படுத் தப்பட்ட இளைஞர்கள், 11.98 லட்சம் பேர் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிகளுக்கு அரசு தேர்வு நடத்தியது. மொத்தம் 2500 இடங்கள், விண்ணப் பித்தவர்கள் 7 லட்சம் பேர்.
இப்படித்தான் ராணுவ ஆளெடுப் பிலும் சரி, போலீ ஆளெடுப்பிலும் சரி, வெறும் ரூ.3000 கிடைக்கிற சாதாரண அத்தக்கூலி வேலையானாலும் சரி.. அலைமோதுகிறது இளைய தமிழகம்.
அலுவலக வாயில்களில், ஆலை வாயில்களில், ஐ.டி. கம்பெனி வாயில் களில் காத்துக்கொண்டே இருக்கிற இளைஞர்களின் சோகம் சொல்ல முடியாதது.
8 வருடத்திற்கு முன்னால் டிஎம்இ (னுஆநு) படித்தேன், கம்ப்யூட்டர் தெரியும், ஆட்டோ கேட் (ஹருகூடீ ஊஹனு) படித்துள் ளேன். பர்ட் கிளாஸில் பாஸாகியுள் ளேன் என்று சான்றிதழ்களை நீட்டி னால், ஐயோ, இது இப்படி பிரயோஜனப் படாதே, நீங்க ஆட்டோ கேட் (ஹருகூடீ ஊஹனு) 2009, படிங்க, ஞசுடீ-நு படிச்சிட்டு வாங்க என்று திருப்பியனுப்புகிற போது எழுகிற வேதனையை வெளிப்படுத்த முடியாது.
பத்தாண்டுக்கு முன்னால் பட்டம் பெற்றவர்கள், எட்டாண்டுக்கு முன்னால் பட்டயம் பெற்றவர்கள், ஐந்தாண்டுக்கு முன்னால் ஐ.டி. பயின்றவர்கள் என எல்லோரும் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டேயிருக்கிறார்கள்.
சரி. வாய்ப்புகள் இல்லையா? வாய்ப் புகளை உருவாக்க முடியாதா? முடியும். அரசால் முடியும். அரசின் சகலதுறை களிலும் கடைநிலை ஊழியர்கள் முதல் உயரதிகாரிகள் வரை பல்லாயிரக்கணக் கான பணியிடங்கள் காலியாகவே உள் ளன. பள்ளிக்கூடங்களில் ஆயிரக்கணக் கில் பணியிடங்கள் காலியாகவே உள் ளன. இவை தவிர, தமிழகம் முழுவதும் அரசு கவனம் செலுத்தாத ஏராளமான தொழில்கள் உள்ளன.
டெக்டைல், பழச்சாறு, வாசனைத் திரவியங்கள், கயிறு உற்பத்தி, மீன் உணவு பதப்படுத்துதல் போன்றவை துவங்கி கருப்பட்டி உற்பத்தி, தீப்பெட்டி உற்பத்தி, பால் உற்பத்தி, பாத்திரங்கள் உற்பத்தி என அந்தந்த பகுதிகள் சார்ந்த சிறு தொழில்களை, குடிசைத் தொழில்களை அழியாமல் பாதுகாக்க வேண்டிய அவ சியம் உள்ளது.
சேதுக்கால்வாய்த்திட்டம் செயல் படத் துவங்கினால், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக் குடி மாவட்டங்களில் இருந்து புலம் பெயரும் அவலம் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்.
தற்போது நடைமுறையில் உள்ள கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவு படுத்தினால், ஏற்கெனவே அமலாகும் கிராமப்புறங்களில் ஆண்டுக்கு 100 நாட்கள் உறுதியாக வேலை கொடுத்தால், இந்த வேலைகளில் உள்ளாட்சி அமைப் புகளை இணைத்து சரியாக கண் காணித்தால், பிரம்மாண்டமான திட்டங் களை அரசு சாதிக்க முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழகத் தின், இந்தியாவின் முதுகெலும்பு விவ சாயம். ஆனால் தங்களது விவசாயத் தந் தைகள்படும் பாட்டைப்பார்த்து இளைய தலைமுறை அதிலிருந்து விலகிச் செல் கிறது. அவர்கள் விலகிச் சொல்வதற் காகவே காத்திருந்தது போல, குமரி முதல் சென்னைவரை கிடைக்கிற நிலத்தை யெல்லாம் விலைகொடுத்து வாங்கி ரியல் எடேட்களாக்கி வருகின்றன நிலக் கொள்ளைக் கும்பல்கள். அழிந்துவரும் விவசாயத்தின் மீது இளைய தலை முறைக்கு நம்பிக்கை ஏற்படுத்த என்ன செய்யப்போகிறது அரசு? நவீன விவசா யம், அதை முறையாக செய்து லாபம் ஈட்டுவதற்கான தொழில்நுட்ப அறிவை வழங்குதல், ஒருவேளை பொய்த்துப் போனால் பயிர்க்காப்பீடு, அனைத்துக் கும்மேல் விவசாயத்தின் மீது, ஆர்வத்தை வரவழைக்க நிலமற்ற ஏழை விவசாயி களுக்கு நிலம் கொடுப்பது, 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை பிரித்தளிப்பது முக்கியமானது.
இவற்றையெல்லாம் செய்தால் மட் டுமே, வேலைகள் பெருகும், இளைஞர்க ளிடம், குடும்பங்களிடம் பணம் புழங்கும். அந்தப்பணம் சந்தைக்கு வரும். தேவை அதிகரிக்கும், பொருள் உற்பத்தி அதி கரிக்கும், பொருளாதாரம் சரியான திசை யில் சுழலும்.
இதுதான், இன்றைக்குத் துவங்குகிற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலம் தழுவிய சைக்கிள் பிரச்சாரப் பயணத்தின் இலக்கு.
ஏற்கெனவே, சேதுக்கால்வாய்க்காக இராமேவரம் நோக்கிச் சென்ற வாலிபர் சங்கச் சைக்கிள்களின் சக்கரங்கள், தற்போது சென்னை நோக்கிச் சுழலத் துவங்குகின்றன. சுழற்சி வெல்லட்டும்!

No comments:

Post a Comment